உதவி வழங்கியவர்:செல்வி சுதாமினி குணலிங்கம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்.
உதவி பெற்றவர்கள்:1.பிலிப்ராஜ் ரேணுகா ஜேம்ஸபுரம் 2.ந.அகஸ்ரியானா
உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு (துவிச்சக்கர வண்டி வழ ங்குதல்)
செல்வி சுதாமினி குணலிங்கம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்.இவர் இலவச மாலை நேரக் கல்வி நிலையத்தின் திறப்பு விழாவிற்கு கெளரவ விருந்தினராக வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தது மட்டுமின்றி அங்கு வருகை தந்த 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி மாணவர்களை மகிழ்வித்தார்.அன்றை யதி னம் மிகவும் நீண்டதூரம் நடந்து செல்லும் மாணவர்கள் தங்களுக்கு துவிச்சக்கர வண்டி வாங்கித்தருமாறு கேட்டதற்கிணங்க செல்வி சுதாமினி குணலிங்கம் அவர்களின் நிதியில் இருந்து இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டது.
செல்வி சுதாமினி குணலிங்கம் அவர்கள் யெர்மெனியில் சிறு வயதில் இருந்து வாழ்ந்தாலும் தாய் மண்னையும் மக்களையும் மறக்காமல் பல உதவிகளை வழங்கி வருகின்றார் அந்த வகையில் அவருக்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய எமது செயற்பாட்டாளர்கள் திரு மணிமாறன் Germany மற்றும் திரு சஜிவன் மேலும் எமது மகளிர் அணி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி




