விசேட மதிய உணவு வழங்கப்பட்டது!
12 வது ஆண்டு நினைவு அஞ்சலி
10.03.2021 12 வது ஆண்டு நினைவு நாளில்
அமரர்களாகிய பொ.சின்னத்துரை,சி.கண்மணி, ம.ரவிச்சந்திரன், ர.நிர்மலாதேவி,ரா.ரிஷாலினி ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.10.03.2009அன்று மாத்தளன் பகுதியில் பதுங்கு குழியில் இருந்த சமயம் எறிகனை விழுந்து அன்பானவர்கள் அனைவரையும் இழந்து தவிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் துணுக்காய் ஒளிரும் வாழ்வு இல்லத்தில் இந்த நாளில் அஞ்சலி நிகழ்வும் விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.இந்த உதவியை வழங்கிய பிள்ளைகளுக்கும் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த ஒளிரும் வாழ்வு நிர்வாகத்தினருக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
பகிருங்கள்: