கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி

14.06.2026

உதவி வழங்கப்பட்ட இடம்: பொன்னகர் வடக்கு, கிளிநொச்சி

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும், இசை வழி போராளியாகவும் திகழும் இசைப் போராளி வேடன் அவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் “கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அவரது நிதிப் பங்களிப்பின் 9ஆவது கொடுப்பனவாக, திருமதி ச. மலர்வதனி அவர்களின் பராமரிப்பில் வாழும் ஒரு மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மனிதநேயப் பணிக்கு தாராள நிதி பங்களிப்பு வழங்கிய இசைப் போராளி திரு. வேடன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து செயற்படும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் – Germany

“கல்விக்கு கரம் கொடுப்போம்; எதிர்காலத்திற்கு ஒளி ஏற்றுவோம்.

பகிருங்கள்: