உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி)
உதவித்தொகை 150,000
இந்த நிதியில் இருந்து முதலாவது கொடுப்பனவு!
திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21.01.2024 ல் 22வது பிறந்த நாள் இன்னாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் முதலாவது கொடுப்பனவாக விவேகானந்த சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு முழு நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் செல்வன் சந்தோஷ் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம். மேலும் ஒவ்வரு வருடமும் பிள்ளைகளின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் உதவியினை வழங்கி வரும் திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் அவர்களுக்கும் நன்றிகள் அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது லண்டன் மகளிர் அமைப்பின் பொருளாளர் திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.