உதவி வழங்கியவர் மயில்வாகனம் சிறிதாசன் (லண்டன்)
உதவித் தொகை :150000,00
இடம்: பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்கள்.
நாட்டில் தற்சமயம் covid 19 நோயின் தாக்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கக்ளும் மற்றும் பெண்கள்தலைமையில் உள்ள குடும்பம் , மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு திரு ம.சிறிதாசன் அவர்களின் நிதி அனுசரனையுடன் உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக
முகமாலை, கிளாலி,தர்மக்கேணி,முல்லையடி,கோவில்வயல், தம்பகாமம் போன்ற கிராமங்களுக்கு 1500,00 ரூபாய் பெறுமதியான 100 உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய திரு. ம.சிறிதாசன் அவர்களும் அவர்கள் குடும்பமும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினை ஒழுங்கு செய்த திரு பிரதீபன் அவர்களுக்கும் அவருடைய நண்பர்கள் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் அவர்களுக்கும் நன்றி.
முக்கிய குறிப்பு: எமது பண்ணைக்காணிக்குள் வேலைகள் இடம் பெறுவதால் எம்மால் தொடர்ந்து இது போன்ற உதவிகள் வழங்க முடியாமல் உள்ளது.
நீங்கள் யாராவது உதவி செய்ய விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசி எண்:00491772061431
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.



+7
All reactions:
54