உதவித்தொகை:100,000.00
22.08.2022
அன்பான உறவுகளே!
எமது சேவை மலையகத்திற்கும் பயணிக்கின்றது..ஆம் உறவுகளே எங்கு உதவிகள் தேவைப்படுகின்றதோ அங்கு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சேவைகள் தொடரும் அந்த வகையில்
இரத்தினபுரி: பிரதேசசெயலர் புஸ்ஸல்ல தோட்டத் தொழிலாளருக்கு
Lavida GmbH Germany நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் 100,000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு தலா 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை 33 தோட்டத் தொழிலாளருக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந்த ஏற்பாட்டினை செய்து தந்த திரு சிவராசா (ஆசிரியர்) அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் Lavida GmbH Germany நிறுவனத்திற்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி


