கற்கும் போது கசப்பாயும், கற்ற பின் கரும்பினை போல் சுவையாக சுவைப்பது கல்வி!
உதவும் இதயங்கள் நிறுவனத்துடன் இணைந்து கல்விக்கு கரம் கொடுப்போம் என்றதிட்டத்துக்கமைய வூர்ஸ்பூர்க் ஜேர்மன் தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் (சமூக ஆர்வலர்கள்) மக்களும் இணைந்து அவர்களின் அனுசரணையுடன் நான்காவது கட்டமாக பாடசலை உபகரணங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் அயல் கிராமங்களில் வாழும் போரினாலும் அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட 50 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.உண்மையில் வூர்ஸ்பூர்க் ஜேர்மன் தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் (சமூக ஆர்வலர்கள்) மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அத்துடன் இவ் ஏற்பாட்டினை செய்து தந்த நல்லிணக்கத்திற்கான உறுப்பினர்களுக்கும் அலுவலர் திருமதி மாலாவுக்கும், எமது உறுப்பினர்கள் செல்வன் கிசோபன் ,திருமதி s பத்மா மற்றும் உதிக்கும் திசை கிராம அபிவிருத்தி சங்கம் சார்ந்தவர்களுக்கும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி “உதவும் இதயங்கள் நிறுவனம்”யெர்மெனி



