11.01.2019அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்றதிட்டத்துக்கமைய வூர்ஸ்பூர்க் ஜேர்மன் தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் (சமூக ஆர்வலர்கள்) மக்களும் இணைந்து அவர்களின் அனுசரணையுடன் முதல் கட்டமாக 250 மாணவர்களுக்கு ( 1,00000.00 )ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இல.02.அ .த .க . கிளி/ஸ்கந்தபுரம் பாடசாலைக்கு வழங்கப்பட்டது அந்தவகையில் வூர்ஸ்பூர்க் ஜேர்மன் தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் மக்களுக்கும் உதவும் இதயங்களாகிய நாங்கள் மனமார்ந்த நன்றிகளை சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இப்படி ஒவ்வருவரும் சிந்தித்தால் ஒருசந்ததி இழந்த கல்வியை தற்போதய சந்நிதியினர் பெற்று விடுவார்கள் எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழமுடியும்.இவ் நிகழ்வில் கலந்து கொண்ட எமது உறுப்பினர்கள் திரு சஜீவன் ,திரு கமல் திரு திவ்வியன், செல்வன் கிசோபன் ஆகியோருக்கும் நன்றி.” உதவும் இதயங்கள் நிறுவனம்” Germany

 

Leave A Reply